Saturday, January 2, 2016

"What Dreams May Come" நமது கனவுகள் வெறும் கனவுகள் அல்ல....அவை இனி தொடர்ந்து......வரும்.


"What Dreams May Come" மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத அளவு ஒரு
கருத்தை இந்த திரைப்படம் சொல்ல முயற்சிக்கிறது,
மனிதர்களின் இறப்புக்கு பின்பு என்னதான் நடக்கிறது என்பதை பற்றிய ஒரு கோணத்து பார்வை என்றும் கூறலாம். அல்லது இப்படி இருக்க முடியாது எனின் வேறு எப்படித்தான் இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பிய ஒரு
திரைப்படமாகவும் இதை பார்க்கலாம்.
நமது மனதை நிச்சயம் கொஞ்சம் அசைத்து பார்த்து விடக்கூடிய வலிமை இந்த
படத்துக்கு நிச்சயம் உண்டு,
இது இப்படித்தானா என்ற கேள்வியை அல்லது பதிலை எமக்குள் இது கிளப்பி விடும்.
இப்படம் சொல்லவரும் செய்தி  உண்மையிலேயே  உண்மை என்பது இவ்வளவு அழகானதா? என்று வியக்க வைக்கிறது.
 எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் இந்த படம் காட்டும் காட்சிகள் நம்மை வெகுவாக ஈர்த்துவிடும், அவ்வளவு அழகாக பிரமாண்டமாக காட்சிகள் வர்ண கலவைகளால் அள்ளி வீசி வரையப்பட்டுள்ளது, அதற்காகவே ஆஸ்கர் பரிசும் பெற்றது,
கதையின் முடிச்சை நான் கூறினால் அதன் சுவாரசியத்தை நான் உங்களிடம்
இருந்து பறிக்கும் தீய செயலை செய்தவன் ஆவேன் ,எனவே ஓரளவு கோடி காட்ட முயற்சிக்கிறேன்,

நடுத்தர குடும்பத்து Dr. Robin Williams தனது மகனை பறிகொடுக்கிறார்,

அதனால் அவரது காதல் மனைவி மனம் உடைந்து போகிறார்,
பின்பு ராபின் வில்லியம்சும் இறந்த மகனை சந்திக்கிறார். ஆனால் அப்போது ராபின்
வில்லியம்ஸ் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை நீங்களே திரையில் பார்த்துகொள்ளுங்கள்.
திடுதிப்பென்று இறந்தவர்கள் இருப்பதாக கருதப்படும் ஒரு காட்சி உலகில் பிரவேசிக்கும் ராபின் வில்லியம்ஸ் மிகவும் அழகான கண்ணை பறிக்கின்ற வர்ணகலவையான ஓவியம் போன்ற ஓரிடத்தில் விடப்படுகிறார்.
ஒரு வேளை தான் இறந்து விட்டாரோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
அப்பொழுது ஒரு கருப்பு இளைஞனை சந்திக்கிறார் .அவ்விளைஞன் பலவிதங்களிலும் ராபின் வில்லியம்சுக்கு வழிகாட்டுகிரான்
அங்கே அவனுக்கு தனது மனைவி தற்கொலைக்கு முயற்சிக்கும் காட்சி தெரிகிறது. அவளை எப்படி காப்பாற்ற முடியும் என்று பலவிதங்களிலும் முயற்சிக்கிறார்,
அவளின் மனம்தான் அவளின் வீடு அல்லது அவளின் உடல் . அது மட்டும் அல்ல தனது மனம்தான் தனது வீடு அல்லது தனது உடல் என்று அவருக்குதோன்றுகிறது.
அவரது இறந்து போன மற்றொரு மகளையும் அவர் சந்திக்கிறார் ஆனால் 
அவள்தான் தன்  இறந்து போன மகள் என்று புரியவில்லை
ஏனெனில் அவள் தான் மிகவும் விரும்பிய ஒரு தாய்லாந்து பெண் போன்று காட்சி அளிக்கிறாள்.
இதை படிக்கும் உங்களுக்கு ஒன்றும் புரியாமல் இருப்பது இயல்புதான்.
ஏனெனில் இந்த படம் அவ்வளவு ஈசியான சமாசாரத்தை சொல்லவில்லை. ஆனால் மிகவும் அற்புதமான அவசியமான ஒரு கதையை அல்லது ஒரு செய்தியை அல்லவா சொல்லியிருக்கிறது.
இறப்புக்கு பின்னே வருவது எப்படி இருக்கும் என்று இதுவரை நாம் வெறும் சமயங்கள் கூறும் கற்பனை கதைகளை அல்லவா நம்பி இருக்கிறோம்?

நாம் இங்கே வரும்போது எமது மனம் எம்மோடு வந்து இந்த உலகை எமக்கு காட்டி இருக்கிறது,
அதே போல இந்த உலகை விட்டு நாம் போகும்போதும் இதே எமது மனம் எம்மோடு வருமா?
அந்த மனம்தான் அங்கே எமது வீடு எமது வாழ்வு என்பதுதான் இந்த படம் கூற வரும் செய்தி என்று எனக்கு தோன்றுகிறது, உங்களுக்கு என்ன தோன்றுமே எனக்கு தெரியாது,
அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய அழகான ஆழமான ஒரு திரைப்படம் இது.